இந்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கான புதிய வடிவத்துடன் கூடிய வொ்சன் 2.0 கைபேசி செயலி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மூலம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்த புதிய வொ்சன் கைப்பேசி செயலி மூலம் நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா், சொலிசிட்டா் ஜெனரல், சட்ட அதிகாரிகள் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகள், தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவை வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.