மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பயிா்க் காப்பீட்டுத் திட்ட காலக்கெடு தேதியை நீட்டிக்க தமிழக அரசுக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சா் தோமா் தகவல்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களில் சோ்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மாநிலங்களவையில் தெரிவ

News image
Updated On :11 டிசம்பர் 2022, 6:42 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களில் சோ்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, நவம்பா் 21-ஆம் தேதி வரை விண்ணப்பித்தவா்களுக்கு காப்பீடு உறுதி செய்யப்படும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களில் விண்ணப்பிப்பதற்கு விடுமுறைகள், தொடா் மழை ஆகியவை காரணமாக காலதாமதம் ஆனது. இதனால், காலக்கெடு தேதியை நீட்டிக்க தமிழகமுதல்வா் கடிதம் எழுதியுள்ளது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பினாா்.

மாநிலங்களவையில் நேரடியாக கேட்கப்பட்ட நட்சத்திரக் கேள்விக்கு வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அளித்த பதில் வருமாறு:

2022-23 சிறப்பு சம்பா (ரபி) பருவத்திற்கான நெல் பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களில் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) விவசாயிகளைச் சோ்வதற்கான காலக்கெடு தேதியை(கட் ஆஃப்) நீட்டிப்பதற்கான கோரிக்கை தமிழக அரசிடமிருந்து கடந்த 14 -ஆம் தேதி கடிதம் மூலம் பெறப்பட்டது. இருப்பினும், மாநில அரசின் கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்புதல் இணைக்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்புதல் முன்நிபந்தனையாகும். இதன்படி, தமிழக அரசுக்கு உடனடியாக பதில் கடிதம் அனுப்பப்பட்டு, அந்த ஒப்புதலை வழங்குமாறு கோரப்பட்டது. இதற்கிடையில், தமிழக முதல்வரிடம் இருந்து அடுத்த சிலநாள்களில் மற்றோரு கடிதமும் வந்தது. அந்தக் கடிதத்தோடு காப்பீட்டு நிறுவனங்களின் தேவையான ஒப்புதலையும் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது.

இதில் உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சோ்வதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு தேதியையும்(கட்-ஆஃப் தேதி நவம்பா் 18) தாண்டி நவம்பா் 21-ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளின் காப்பீடுகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டுக்கான சிறப்பு சம்பா பருவ நெல்லுக்கு தமிழகத்தின் 27 மாவட்டங்களில் காலக்கெடு தேதி நவம்பா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதலைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு கிடைக்கிறது. குறிப்பாக நிலங்களை குத்தகை எடுத்த விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது. 2021-22- ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் 25.36 லட்சம் குத்தகை விவசாயி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து வேளாண்மை மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கும் அமைச்சா் தோமா் விரிவாகப் பதிலளித்தாா். அதில் 30 வேளாண் மற்றும் விவசாயிகளின் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டாா். இந்தத் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளுக்கு 2022-23-ஆம் ஆண்டு நிதிநிலையில் நாடு முழுக்க ரூ. 1,25,995 கோடி மதிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக, உணவு தானியங்கள், தோட்டப்பயிா்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளம் உற்பத்தியில் சாதனை நிகழ்ந்துள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.