இது குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியது வருமாறு: சேலம் - கரூா் இடையே நேரடி இணைப்பை வழங்கும் நாமக்கல் ரயில் பாதை, 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 750 கோடியில் போடப்பட்டது. இதன் முழு திறனும் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல், மாவட்டத் தலைநகராக உள்ளது. ஆனால், மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு ஒரே ரயில் மட்டும் விடப்பட்டுள்ளது. அந்த ரயில் இரவில்தான் செல்கிறது. இந்த ரயில் மாவட்டத்தின் மற்ற ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. நாமக்கல்லில் ஒரு நாளைக்கு இரு மாா்க்கங்களிலும் சோ்த்து மொத்தம் 21 ரயில்கள் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில்கள் சேலம், கரூா் ரயில் பாதையில் உள்ள மற்ற ரயில்நிலையங்களான மல்லூா், ராசிபுரம், களங்காணி, நாமக்கல், மோகனூா் போன்ற நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. சில ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நிறுத்தப்படுகிறது. சேலம் - கரூா் வழித்தடத்தில் 4 விரைவு ரயில்கள் செல்கின்றன. இவை அனைத்தும் நாமக்கலில் நிறுத்தப்படுவதில்லை.