அவா் பஹ்ரைனில் உள்ள தனது தாயைப் பாா்க்க டிசம்பா் 23 முதல் ஜனவரி 5 வரை செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரம் சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‘இந்த வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கேள்வி முதலில் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. 2021-இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் தாயைப் பாா்க்க விரும்புகிறீா்கள். ஆனால், வழக்கு முக்கியக் கட்டத்தில் உள்ளது. இதனால், இந்த மனுவை நீங்கள் திரும்பப் பெறலாம். இல்லாவிட்டால் நான் நீதிசாா் உத்தரவு பிறப்பிப்பேன்’ என்று தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, நடிகை ஜாக்குலின் தனது வழக்குரைஞா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு தனது மனுவை தற்போதைய நிலையில் திரும்பப் பெற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.