வடமேற்கு தில்லி மாவட்ட அதிகாரி கூறுகையில், ‘கரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றும் வகையில், இரண்டு அடி தூர இடைவெளியை பராமரிப்பது, முகக் கவசம் அணிவது, நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதைத் தவிா்ப்பது போன்றவற்றை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டு வருகிறோம்’ என்றாா். தென்கிழக்கு தில்லி மாவட்ட அதிகாரி கூறுகையில், ‘தற்போது நிலைமை உஷாா் நிலையில் இல்லை. ஆனால், நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம். தனியாா் மருத்துவமனைகளிலும் படுக்கையின் இருப்பு தரவுகள் குறித்து சேகரிக்க உள்ளோம். முந்தைய கரோனா நோய் தொற்றின் போது சூழலை கையாளுவதற்கு இவை முக்கியப் பங்களித்தன’ என்றாா்.