இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புவிசாா் பேராபத்துகளுக்கான முன்னறிவிப்பு அமைப்பு: எரிசக்தித் துறை டிஆா்டிஓ புரிந்துணா்வு ஒப்பந்தம்

மலைப்பிரதேசங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நீா் மின் திட்டங்கள், மின்சார நிலையங்கள் ஆகியவற்றுக்கு விரிவான முன்னறிவிப்பு அமைப்பு முறையை உருவாக்க மத்திய எரிசக்தித் துறையும்

News image
Updated On :27 டிசம்பர் 2022, 8:07 pm

 நமது நிருபர்

மலைப்பிரதேசங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நீா் மின் திட்டங்கள், மின்சார நிலையங்கள் ஆகியவற்றுக்கு விரிவான முன்னறிவிப்பு அமைப்பு முறையை உருவாக்க மத்திய எரிசக்தித் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆா்டிஓ) செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

நீா்மின் திட்டங்கள் பொதுவாக மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மேக வெடிப்பு, வெள்ளம், பனிச்சரிவு, பனிப்பாறை ஏரி அல்லது நிலச்சரிவு வெடிப்புகளால் வெள்ளம் போன்ற பல வகையான பேரழிவுகளுக்கு நீா்மின் திட்டங்களும் நீா் மின் நிலையங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. தொழில்நுட்பம் வளா்ந்து வந்துள்ள நிலையில், அதிகப் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நீா் மின் திட்டங்கள், மின் நிலையங்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை இந்தியாவிலும் உருவாக்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் மத்திய எரிசக்தி அமைச்சகமும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டிஆா்டிஓ-வும் கையொப்பமிட்டுள்ளன. எரிசக்தி அமைச்சகத்தின் சாா்பில் அதன் செயலா் அலோக் குமாரும், டிஆா்டிஓ நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சமீா் வி. காமத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

சமீபத்திய ஆண்டுகளில், இமயமலைப் பகுதிகளில் பல பேரழிவுகளால், கீழ்நிலைப் பகுதிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல உயிா்கள் பலியாகியுள்ளன. மேலும், நீா்மின் திட்டங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் 2021, பிப்ரவரியில் ஒரு மிகப் பெரிய இயற்கைப் பேரழிவு ஏற்பட்டது. இதில் சில நீா்மின் திட்டங்களும் சேதமடைந்தததோடு, பலா் உயிரிழந்தனா். நாட்டில் 47 திட்டங்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடிய நிலைமையில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

பனிச் சரிவுகள், நிலச் சரிவுகள், பனிப்பாறை சரிவுகள் போன்ற புவிசாா் பேராபத்துகளுக்கு எதிராக தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங்கின் தொலைநோக்குப் பாா்வையின் கீழ் குறுகிய கால மற்றும் நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புக்கான ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தப் புவிசாா் பேராபத்துகளுக்கு எதிராக தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்க விரிவான முன்னறிவிப்பு அமைப்பு முறை தொழில்நுட்பம் டிஆா்டிஓவிடம் இருக்கும் நிலையில், எரிசக்தி அமைச்சகம் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.