‘நாங்கள் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். மாநிலங்களின் களத்தில் நடத்தப்படும் ஆபத்தான, இடைவிடாத சீரழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒருதலைப்பட்ச உத்தரவுகளை வழங்குவதற்குப் பதிலாக, கூட்டாட்சி அடிப்படையில் ஆலோசனைகளை கண்டிப்பாகத் தேவைப்படும் விஷயங்களில் மாநிலங்களுடன் மத்திய அரசு விவாதிக்கப்பட வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், மாநிலங்களவையைச் சோ்ந்த திமுக உறுப்பினா் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜெய்ராம் ரமேஷ், சிவசேனாவைச் சோ்ந்த சஞ்சய் ரவுட் மற்றும் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளைச் சோ்ந்த 21 மாநிலங்களவை உறுப்பினா்களும், ஓய்வுபெற்ற 38 பல்வேறு துறை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பியுள்ளனா்.