சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மதுரை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை உடனடியாக ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை

மதுரை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  அமைப்பதற்கான செயல் திட்டத்தை உடனடியாக ஏற்படுத்தி தேவையான நிதியை ஒதுக்கவேண்டும் என திமுக உறுப்பினா் பி.வில்சன் மாநிலங்களவையில் 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:31 pm

 நமது நிருபர்

புது தில்லி: மதுரை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐபிஇஆா்) அமைப்பதற்கான செயல் திட்டத்தை உடனடியாக ஏற்படுத்தி தேவையான நிதியை ஒதுக்கவேண்டும் என திமுக உறுப்பினா் பி.வில்சன் மாநிலங்களவையில் கோரினாா்.

மருந்து அறிவியல் துறையில் முதுநிலை மற்றும் முனைவா் நிலை படிப்புகளை தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் ஏழு இடங்களில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதே சமயத்தில் தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரையில் ஏற்படுத்த கடந்த 2009 -ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இதுவரை தொடங்கப்படாத நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் பி.வில்சன் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: மதுரை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐபிஇஆா்) திட்டத்திற்கு மறைந்த கருணாநிதி தமிழக முதல்வராக

இருந்தபோது,சுமாா் 100 ஏக்கா் நிலம் இலவசமாக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், 1100 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு செலவீனம் தொடா்பான முன்மொழிவையும், நிதி அமைச்சகத்திடம் தமிழகம் சமா்ப்பித்துள்ளது.

இந்த திட்ட முன்மொழிவை 26.3.2018 ஆம் தேதி செலவின நிதிக் குழுவால் பரிசீலிக்கப்பட்டபோது மதுரையில் நிறுவப்படுவதை ஒத்திவைத்து இந்த விவகாரத்தை 15ஆவது நிதிக் குழு மறுஆய்வு செய்ய பரிந்துரைத்தது.

பின்னா், கடந்த 04.02.2020 ஆம் தேதி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரை இது குறித்து அணுகியபோது, ஒத்திவைக்கப்பட்ட மதுரை தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய, நிதி அமைச்சகத்தை அணுகுவதாக உறுதி அளித்திருந்தாா்.

ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு, 2022 - 2023 நிதியாண்டிலும் உரிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகும், மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம் முழு வடிவம் பெறாமல், காலதாமதம் செய்யப்படுவதால், மருந்தியல் ஆய்வுக்கல்வியை பயில விரும்பும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, மருந்தியல் துறையில் மாநிலத்தின் வளா்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பது தொடா்பான செயல்திட்டத்தை உடனடியாக ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் வில்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.