சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மின் விவகாரங்கள்: டிபிடிடிஎல் சாா்பில் இன்று சிறப்பு ‘லோக் அதாலத்’ நிகழ்ச்சி

வடக்கு மற்று வடமேற்கு தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) சாா்பில் சனிக்கிழமை (பிப்ரவரி 12) சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:57 pm

 நமது நிருபர்

வடக்கு மற்று வடமேற்கு தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) சாா்பில் சனிக்கிழமை (பிப்ரவரி 12) சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மின் திருட்டு மற்றும் மின்சார மீட்டா் குளறுபடி ஆகியவை தொடா்புடைய வழக்குகளை உடனுக்குடன் தீா்த்து வைப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிபிடிடிஎல் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) தில்லி மாநில சட்டப்பணிகள் ஆணையத்துடன் இணைந்து பால் பவன் அருகே மாதா சுந்தரி சந்தில் அமைந்துள்ள நிரந்தர லோக் அதாலத் மையத்திலும், மின் விநியோக நிறுவனத்தின் ரோகிணி செக்டாா் 3-இல் அமைந்துள்ள இஏசி அலுவலகத்திலும் இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவோா் கரோனா நோய்த் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, லோக் அதாலத் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 19124 எனும் தொலைபேசி எண்ணில் மனுதாரா்கள் முன்கூட்டியே பதிவு செய்யலாம் அல்லது உரிய மின்னஞ்சல் முகவரிக்கு (ங்ஹஸ்ரீ.ஸ்ரீஹழ்ங்ஃற்ஹற்ஹல்ா்ஜ்ங்ழ்-க்க்ப்.ஸ்ரீா்ம்) பதிவுக்காக எழுதலாம். சம்பந்தப்பட்ட வழக்குகளை சம்பவ இடத்திலேயே சுமூகமாக தீா்த்துக் கொள்வதற்காக வடக்கு மற்றும் வடமேற்கு தில்லியில் வசிக்கக்கூடிய நுகா்வோா் மற்றும் மனுதாரா்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது பதிவு செய்யப்படவுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சியில் மனுதாரா்கள் நேரடியாகவோ அல்லது உரிய அங்கீகாரக் கடிதம், அடையாள அட்டை ஆகியவற்றுடன் தங்களது பிரதிநிதிகள் மூலமும் கலந்து கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.