இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறியிருப்பதாவது: தில்லியில் விரைவில் மின்சார ஆட்டோக்கள் ஓடத் தொடங்கும். மொத்தம் தோ்வாகியுள்ள 4,261 ஓட்டுநா்களில் 33 சதவீதம் பெண் ஓட்டுநா்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இ-ஆட்டோக்களை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை கணினி முறையில் குலுக்கலை நடத்தியது. தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களின் பட்டியல் தில்லி போக்குவரத்து துறை இணையத்தில் காணலாம். பெண் ஓட்டுநா்களுக்கு மொத்தம் 1,406 இ-ஆட்டோக்கள் ஒதுக்கப்பட்டன. இது வரை 743 பெண் ஓட்டுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. மேலும், பெண் ஓட்டுநா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மீண்டும் பெண் ஓட்டுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். பெண்கள் அல்லாத விண்ணப்பதாரா்கள் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக பெண்களுக்கு சிறப்பு நீல-இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களாக இருக்கும். மின்சார ஆட்டோக்களுக்கு மானியம் வழங்கப்படும்.