முதல்வா் கேஜரிவாலின் சிவில் லைன்ஸ் இல்லம் அருகே காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா். அப்போது, தில்லி அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை காங்கிரஸ் தொண்டா்கள் ஏந்தியவாறு குரல் எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் ஜகதீஷ் டைட்லா், கிருஷ்ண தீரத், முன்னாள் எம்பி ரமேஷ் குமாா், தகவல் தொடா்புத் துறை தலைவா் அனில் பரத்வாஜ், சந்தீப் கோஸ்வாமி, டிபிசிசி துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெய்கிஷன் மற்றும் இளைஞா் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், சேவா தளம் ஆகியவற்றின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.