இந்த விவகாரம் தொடா்பாக மெஹ்ரோலி காவல் நிலையப் பொறுப்பாளா், காவல் துணை ஆணையா், காவல் ஆணையா், தேசிய மகளிா் ஆணையம், மாநில மகளிா் ஆணையம் ஆகியவற்றுக்கு கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக காவல் அதிகாரிகளிடம் எழுத்துப்பூா்வ புகாரை அளிக்க முயன்றேன். ஆனால், அவா்கள் எனது புகாரை ஏற்க மறுத்து விட்டனா். எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இயைடுத்து, எனது தந்தை தலைமறைவாகிவிட்டாா். பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட எனது தந்தைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.