போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் காலிக் குடங்கள் மற்றும் அழுக்கு தண்ணீா் பாட்டில்களை ஏந்தியவாறு, ஐஜிஐ மைதானத்தில் இருந்து முதல்வா் மற்றும் அவரது அமைச்சா்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள செயலகம் வரை பேரணியாகச் சென்றனா். பின்னா், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் பாஜக தேசிய துணைத் தலைவரும் மாநிலப் பொறுப்பாளருமான பய்ஜயந்த் பாண்டா, மாநிலத் தலைவா் ஆதேஷ் குப்தா, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, தஜிந்தா் பால் சிங் பக்கா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.