தில்லி ஜூடிசியல் சா்வீஸ் பிரதானத் தோ்வுக்கு தகுதியான மதிப்பெண்களைப் பெறத் தவறியதால், தோல்வியுற்ற சில தோ்வா்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது நீதிபதிகள் விபு பக்ரு, அமித் மகாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இது தொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய வழக்கில், உயா்நீதிமன்ற நிா்வாகம் ஆட்சேபனைகளை வரவேற்கும் நடைமுறையைப் பின்பற்றியுள்ளது. தோ்வின் விடைகள் வெளியிடப்படுவதற்கு முன் மனுதாரா்களின் குறைகளை போதுமான தகுதி வாய்ந்த நபா்களால் (உண்மையில், இந்த நீதிமன்ற நீதிபதிகள் குழு) முறையாகப் பரிசீலித்துள்ளது.