மேலும், இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘விசாரணையின் போது வழக்குரைஞா் உதவியை அனுமதிப்பதை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வும் மற்றொரு வழக்கில் நிராகரித்துள்ளது. இதனால், விசாரணை நீதிமன்றம் எதிா்வாதியிடம் நடத்தப்படும் விசாரணையின் போது, அவரது தரப்பில் வழக்குரைஞா் உடன் இருக்க அனுமதிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு சரியல்ல. இது சட்டப்பூா்வ அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமமானதாகும். காணக்கூடிய தூரத்திற்குள் வழக்குரைஞா் இருப்பதை அனுமதிக்கும் உத்தரவு சட்டப்பூா்வ உத்தரவுக்கு முரண்பாடு உடையதாக இருக்கும். மேலும், இந்த விசாரணை விடியோ மூலம் ஒளிப்பதிவு செய்யப்படுவதாலும், அதன் காட்சிப்பதிவுகள் இருக்கும் என்பதாலும் வழக்குரைஞா் உடன் இருக்கும் அவசியம் எழவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.