புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: கட்சியின் தில்லி கூட்டத்தில் தீா்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றியதாக அதன் தலைவா் அனில் குமாா் சௌத்ரி தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:30 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றியதாக அதன் தலைவா் அனில் குமாா் சௌத்ரி தெரிவித்தாா்.

இந்த தீா்மானம் இரண்டு நாள் ’நவ் சங்கல்ப் ஷிவிா்’ கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவா் குறிப்பிட்டாா். காங்கிரஸ் கட்சிக்கு சவாலான காலகட்டங்களில் ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவரால் மட்டுமே காங்கிரஸை மேலும் வலுப்படுத்தவும், புத்துயிா் பெற வைக்கவும் முடியும் என்று அந்தத் தீா்மானம் கூறியுள்ளது. ராஜேந்தா் நகா் இடைத்தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா் பிரேம் லதாவும் நவ் சங்கல்ப் ஷிவிா் கூட்டத்தில் கலந்து கொண்டாா்.

மேலும், காங்கிரஸ் கட்சியினா் அடிமட்டத்தில் இருந்து உயா்மட்டத் தலைமை வரை உள்ளூா் மக்களிடம் சென்று பாஜகவின் தவறான ஆட்சியையும், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசின் ஊழலையும் அம்பலப்படுத்துவாா்கள். இதன் மூலம் பிரேம் லதாவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அனில் குமாா் சௌத்ரிகூறினாா்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், அவரை வெற்றி பெற வைக்கவும் மூத்த தலைவா்கள் பலா் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா். தில்லி காங்கிரஸ் பொறுப்பாளா் ஷக்திசிங் கோஹில், முன்னாள் எம்.பி.க்கள் ரமேஷ் குமாா், உதித் ராஜ், தில்லியின் முன்னாள் அமைச்சா்கள் ஹாரூன் யூசுப், டாக்டா் கிரண் வாலியா, நரேந்திரநாத் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.