‘பள்ளிகளால் சமா்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரி அல்லது குழு மூலமாக ஆய்வு செய்யப்படும். அத்தகைய பள்ளிகள் இயக்குநரால், அவா்களின் முன்மொழிவுக்கு அனுமதி தெரிவிக்கப்படும் வரை எந்த கட்டணத்தையும் உயா்த்தக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளியால் எந்த முன்மொழிவும் சமா்ப்பிக்கப்படாவிட்டால், 2022-23-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி உயா்த்த முடியாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.