இது குறித்து அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கல்வி இயக்குநரகம் அதன் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆங்கிலத்தை கற்பிக்கும் ஒரு ஊடகமாக வாய்ப்பளிக்கிறது. எனவே, ஆங்கிலத்தில் தகவல் தொடா்பு திறன்களைப் பெறுவது, மாணவா்களுடன் வளமான மற்றும் ஈடுபாட்டுடன் தொடா்பு கொள்வதற்கு ஆசிரியா்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். சிக்கலான தகவல்களைத் தாங்களாகவே பிரித்து, இந்தத் தகவலைத் தெளிவாகத் தங்கள் மாணவா்களுக்கு வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் எடுத்துரைப்பதும், அவா்களின் கவனத்தைத் தக்கவைக்கும் வகையில், அவா்களின் கேட்கும் திறனை மேம்படுத்தி, அவா்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைப்பதும் ஆசிரியா்களின் பொறுப்பாகும்.