இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘போராட்டம் மேற்கொள்ள ஐடிஓ பகுதியில் 17 முதல் 18 போ் கூடியிருந்தனா். இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனா்’ என்றாா். இது குறித்து ஏஐஎஸ்ஏ தேசியத் தலைவா் என். சாய் பாலாஜி கூறுகையில், ‘அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும். ஏனெனில், இத்திட்டம் பாதுகாப்புப் பணிகளை ஒப்பந்தமாக்குவதற்கான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாடும் மோடி அரசுக்கு இது ஒரு அவமானமாகும்’ என்றாா்.