தில்லியில் குடும்ப தகராறு: 3 பேர் பலி

தில்லியில் ஹிதேந்தர்(43)  குடும்ப சண்டையில் மனைவி மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: தில்லியில் ஹிதேந்தர்(43)  குடும்ப சண்டையில் மனைவி மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த விவரங்களை காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தப்போது ​​சுரேந்திரா, விஜய், சீமா மற்றும் பபிதா ஆகிய நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டனர்.

விசாரணையில், ஹிதேந்திராவுக்கும், அவரது மாமியார்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதில் அவரது மனைவி சீமா, அவரது இரு சகோதரர்கள் சுரேந்திரன், விஜய் மற்றும் அவரது மனைவி பபிதா ஆகியோரை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு விஜய், சுரேந்தர் மற்றும் பபிதா ஆகியோர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். ஹிதேந்தர் மனைவி சீமா துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.

ஹிதேந்தரயிடம் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com