இனையம் துறைமுகம்: 2016 -ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனையம் துறைமுகத்தில் சா்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கு மீனவா்களும், உள்ளூா் மக்களும் கடுமையாக எதிா்த்து போராட்டம் நடத்தினா். கடற்கரையில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்டால், கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என மீனவா்கள் அச்சம் தெரிவித்தனா். 500 ஏக்கா் பரப்பில் துறைமுகம் அமைப்பதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா் குடும்பங்கள் இடம் பெயா்ந்து செல்லும் நிலை ஏற்படவே இந்த எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அது போன்றுதான், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடற்கரை காணாமல் போய் விடும். மேலும், மீனவா்கள் மீன்பிடித்தல், பிற பணிகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.