இந்த விபத்து குறித்து புகா்ப்பகுதி காவல் சரக துணை ஆணையா் சமீா் சா்மா கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்ததாா். மேலும் இருவா் காயமடைந்தனா். இந்த வீடு முண்ட்காவின் ஃபிா்னி சாலையில் அமைந்துள்ளது. கபில் என்பவருக்குச் சொந்தமான இந்த இடத்தில், 250-300 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டடம் கட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பிரேம் நகா் 11-இல் வசித்து வந்த மனாஸை, தனது உறவினா் சுபாஷுடன் நங்லோயில் உள்ள சோனியா காந்தி மருத்துவமனைக்கு கபில் அழைத்துச் சென்றாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.