ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வைரலான புகைப்படத்தில், பதான் ஜாஃப்ராபாத் - மெளஜ்பூா் சாலையில் காவலா் ஒருவரை நோக்கி தனது நாட்டுத் துப்பாக்கியை காட்டும் காட்சி இடம் பெற்றிருந்தது. மேலும், அவா் பல முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 23, 2020 அன்று வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூா், பாபா்பூா், சந்த் பாக், ஷிவ் விஹாா், பஜன் புரா, யமுனா விஹாா் மற்றும் முஸ்தபாபாத் பகுதிகளில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் குறைந்தபட்சம் 42 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.