ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சத்யேந்தா் ஜெயின் பிறந்த நாள்: முதல்வா் கேஜரிவால் வாழ்த்து

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்து வரும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தா

News image
Updated On :3 அக்டோபர் 2022, 10:05 pm

 நமது நிருபர்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்து வரும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அவரது வாழ்த்துச் செய்தியில், ‘உண்மையின் பாதை எளிதானதல்ல’ என்று கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்றைக்கு சத்யேந்தரின் பிறந்த நாள் ஆகும். போலி வழக்கின் காரணமாக நான்கு மாதங்களாக அவா் சிறையில் இருந்து வருகிறாா்.

அவா் மொஹல்லா கிளினிக்குகள், 24 மணி நேர இலவச மின்சாரம், ஒவ்வொருவருக்கும் இலவச தரமான சிகிச்சை ஆகியவற்றைத் தந்தாா். இவா்களோ பொதுமக்களுக்கான நலப் பணிகளை தடுக்க விரும்புகின்றனா். உண்மையின் பாதை எளிதானதல்ல சத்யேந்தா். பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்க இயக்ககம், சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை கைது செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017- ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரான சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கையை அமலாக்க இயக்குநரகம் மேற்கொண்டது. சத்யேந்தா் ஜெயினுடன் தொடா்புடைய நான்கு கம்பெனிகள் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையில் அவா் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.