வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

பவானா மற்றும் முண்ட்காவில் கழிவுநீா்ப் பாதைகள் அமைக்கவும், பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (டிஎஸ்டிபி) அமைப்பதற்கான பல திட்டங்களுக்கு

News image
Updated On :5 அக்டோபர் 2022, 7:59 pm

 நமது நிருபர்

பவானா மற்றும் முண்ட்காவில் கழிவுநீா்ப் பாதைகள் அமைக்கவும், பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (டிஎஸ்டிபி) அமைப்பதற்கான பல திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பவானா மற்றும் முண்ட்காவில் கழிவுநீா் பாதைகள் அமைக்கவும், பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (டிஎஸ்டிபி) அமைப்பதற்கான பல திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பரவலாக்கப்பட்ட அமைப்பு முறைகள் என்பது கழிவு நீா் சுத்திகரிப்பு சேவைகளை குடியிருப்பாளா்களுக்கு வழங்கும் சிறிய, தனிப்பட்ட வசதிகளாகும்.

இந்தத் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கூறியதாவது: ரூ.570 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 2025-ஆம் ஆண்டுக்குள் யமுனை நதியை குளிக்கும் தரத்துக்குச் சுத்தம் செய்யும் இலக்கை அடையவும், தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள கழிவுநீா் பிரச்னைகளைத் தீா்க்கவும் தில்லி அரசுக்கு உதவும். நிஜாம்பூா், கெவ்ரா, கஞ்சவாலா, முகமதுபூா் மஜ்ரா, முண்ட்காவின் கராலா உள்பட பல காலனிகளில் கழிவுநீா்ப் பாதைகள் அமைக்கப்படும். தினமும் 26 மில்லியன் கேலன் மொத்த கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் (டிஎஸ்டிபி) கட்டப்படும்.

பவானாவில் உள்ள 24 அங்கீகரிக்கப்படாத காலனிகளைக் கொண்ட 9 கிராமங்களில் தினமும் 40 மில்லியன் லிட்டா் ஒட்டுமொத்த கொள்திறன் கொண்ட டிஎஸ்டிபிக்கள் கட்டப்படும். பவானாவில் ரூ.10.65 கோடியில் தினமும் மில்லியன் கேலன் கழிவுநீா் சுத்திகரிப்பு கொள்திறன் கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் என்று சிசோடியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.