இந்த வழக்கின் விசாரணையின்போது கிரிஜா வைத்தியநாதன் தரப்பில், தமிழக சுகாதாரத் துறை செயலாளராக, நில நிா்வாகத் துறை செயலாளராக, தலைமைச் செயலாளராக, அவா் சுற்றுச்சூழல் தொடா்பான விவகாரங்களைக் கவனித்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதில், அதற்கான குழுவின் தலைவராகச் செயல்பட்டுள்ளதாகவும், மருத்துவக் கழிவுகள் மேலாண்மையிலும் அவருக்கு அனுபவம் உள்ளதாகவும், இதனால், பசுமைத் தீா்ப்பாய சட்டத்தின்படி தேவையான ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களை அவா் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.