இது தொடா்பாக செந்தில்குமாா் ஜம்புலிங்கம் உள்ளிட்ட இருவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு மீன்வளத் துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரா்களும், அவரது குடும்பத்தினரும் மற்றும் கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு அரசியலமைப்புச்சட்டத்தை மீறியும், மீனவா்கள் மீது குற்ற நடவடிக்கையையும் எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.