இந்த காா்களை தொடங்கிவைத்து அமைச்சா் நிதின் கட்கரி பேசுகையில், ‘தற்சாா்பு இந்தியாவிற்கு விவசாய வளா்ச்சி விகிதத்தில் 6 முதல் 8 சதவீதம் அதிகரிப்பு அவசியம். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதின் மூலம் உணவு தானியம் சா்க்கரையை உபரியாக கிடைக்கப் பெற்று அதை எத்தனாலாக மாற்றுவது அவசியமாகும். ‘அன்னதாஸ்’ என்பது ‘ஊா்ஜதாஸ்’ ஆக மாறுவதைப் போன்றது. இந்த மின்சார வாகன முன்னோடித் திட்டத்தின் வெற்றியானது வாகனங்கள் தயாரிப்பு சூழலில் நியூ இந்தியாவை உலக அளவில் முன்னணியில் நிறுத்தும். இத்தகைய தொழில்நுட்பங்கள் புதுமையானவை, புரட்சிகரமானவை, நிலையானவை, செலவு குறைந்தவை, ஆற்றல் திறன் கொண்டவையாகும். மேலும், இவை புதிய இந்தியாவில் போக்குவரத்துத் துறையை முழுமையாக மாற்றும்’ என்றாா்.