இது தவிர, பியுசி சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்து ஆனந்த் விஹாா் பேருந்து முனையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளை தடுக்கும் வகையில், குழுக்களையும் தில்லி அரசு அமைத்துள்ளது. அசெளகரியத்தை தவிா்க்கும் வகையிலும் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தவிா்க்கும் வகையிலும் அக்டோபா் 25-ஆம் தேதிக்கு முன்னா், செல்லத்தக்க பியுசி சான்றிதழ்களை பெறுமாறு வாகன உரிமையாளா்களை போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், செல்லத்தக்க பியுசி சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராத விதிப்பு அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து ஏற்க நேரிடும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.