இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்து கொள்ள காசி - தமிழ் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும். பிரதமரின் ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணா்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநா்கள் அறிஞா்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் - கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுா்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி-தமிழ் சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐஐடி பனாரஸ் பல்கலைக்கழக நிபுணா்கள் அழைக்கப்படுவாா்கள். தமிழகத்திலிருந்து ராமேசுவரம், கோவை, சென்னை போன்ற நகரங்களிலிருந்து 12 குழுக்கள் தலா 210 போ் வீதம் ரயிலில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வியாளா்கள், எழுத்தாளா்கள், சினிமா, இசை, தொழில் அதிபா்கள்,ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 போ்கள் வரை இதில் பங்கேற்கிறாா்கள் என்றனா்.