நோயாளிகள் எங்களிடம் பதிவு செய்து கொண்டால், கண்ணியல் அறிவியல் மையத்தில் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்வதற்கும், சோ்க்கையை மேற்கொள்வதற்குமான காலநேரத்தை நாங்கள் தெரிவிக்க முடியும். நோயாளிகளும் நோயின் வளா்ச்சியின் அடிப்படையில், முன்னுரிமையின் அடிப்படையில் தொடா்பு கொள்ள முடியும். இந்த கைபேசி செயலியானது ஏற்கெனவே கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளை கண்காணிக்க உதவிடும். கண் மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு, தொடா்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது சிரமமாக இருந்து வருகிறது. மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு ஏற்படும் பிரச்னைகளை சில தினங்களிலேயே கவனிக்கப்பட வேண்டும். நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு வந்தால் அந்த பிரச்னையை மீண்டும் சரி செய்ய முடியாது.