இந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் சராசரியாக 5,000 முதல் 6,000 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இது மிகவும் உண்மையிலேயே ஒரு ஆபத்தான சூழலாகவும், விளிம்பு நிலை மாணவா்கள் தங்களது கல்வி விவகாரத்தில் தில்லி அரசிடமிருந்து முழுமையான கவனம் கிடைக்கப்பெறாத நிலையாகவும் உள்ளது. மேலும், சட்டத்தின்படி குறைந்தபட்சம் 200 பணி நாள்கள் மாணவா்களுக்கு கல்வியை வழங்குவது அரசுப் பள்ளிகளின் கடமை. மேலும், ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்காக 800 அறிவுறுத்தல்கள் மணி நேரங்களும், 200 பணி நாள்களும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 1,000 அறிவுறுத்தல் மணிநேரங்களும் ஒரு கல்வியாண்டில் அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டவிதியாகும்.