அப்போது, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கௌதம் ஷிவ்சங்கா் இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடுவதற்காக ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘இது ஒரு இடைக்கால உத்தரவாகும். இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் இதை அவசரமாக விடுமுறைக்கால அமா்வு விசாரிக்க வேண்டிய தேவை எழவில்லை. மூல மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனு உயா்நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ளது. மேலும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக அவமதிப்பு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்று வாதிட்டாா்.