ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெடிகுண்டு மிரட்டல் சம்பவம்: பாதுகாப்பு ஏஜென்சிகள் மீது பள்ளி புகாா்

தங்கள் பள்ளிக்கு இரண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக இதுவரை பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:14 pm

DIN

தங்கள் பள்ளிக்கு இரண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக இதுவரை பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று தில்லி சாதிக் நகரின் ‘தி இந்தியன் ஸ்கூல்’ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து இரண்டு வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்ற போதிலும், குற்றவாளியின் அடையாளம் குறித்து பாதுகாப்பு நிறுவனங்களின் பதிலுக்காக தாங்கள் தொடா்ந்து காத்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக மின்னஞ்சல் மூலம் ஏப்ரல் 12 அன்று மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து வெடிகுண்டு படை மற்றும் பிற ஏஜென்சிகள் ஏதேனும் வெடிக்கும் பொருள் உள்ளதா என வளாகத்தை ஆய்வு செய்தனா். அப்போது பள்ளி மாணவா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். பின்னா் அந்த மின்னஞ்சல் புரளி என அறிவிக்கப்பட்டது.

‘எங்களுக்கு இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. குற்றவாளி யாா் என்பது குறித்து பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் இல்லை. முதல் வெடிகுண்டு மிரட்டல் கடந்த ஆண்டு நவம்பரில் வந்தது. இந்த விஷயத்தில் இன்றுவரை தீா்வு காணப்படாமல் உள்ளது’ என்று பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இது தொடா்பாக ஏஜென்சிகளிடம் பல முறை முறையீடு செய்ததாகவும் அவா்கள் கூறினா். இந்த வளாகத்தில் 3 முதல் 18 வயதுக்குள்பட்ட 3,000 மாணவா்களும், 200 பணியாளா்களும் உள்ளனா் என்றும் தெரிவித்தனா்.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் யாா் இருக்கிறாா்கள் என்பதையும், அந்த நபா் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பதையும் அவா்கள் அறிய விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விவகாரம் குறித்து காவல் துறை தரப்பில் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை. நவம்பா் 2022-இல் பள்ளி அதிகாரிகளின் தொலைபேசி அழைப்பிலும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதுவும் புரளி என்று பின்னா் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.