தில்லி பாா் கவுன்சிலா் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஒரு நோட்டீஸை வெளியிட்டிருந்தது. அதில், பிசிடியில் பதிவு செய்ய முன்மொழியும் வழக்குரைஞா்கள் தில்லி அல்லது என்சிஆரில் வசிப்பதற்கான ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தேசிய தலைநகரில் பதிவு செய்ய விரும்பும் புதிய சட்டப் பட்டதாரிகளும் தில்லி, என்சிஆா் முகவரியுடன் கூடிய ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை நகல்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்றும், இந்த ஆவணங்கள் இல்லாமல் இனிமேல் பதிவுகள் எதுவும் நடைபெறாது எனவும் அதில் தெரிவித்துள்ளது.