இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை 3-ஆவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் செந்தில் பாலாஜி, மேகலா தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாள்கள் கால அவகாசம் முடிந்துவிட்டால், அதன் பிறகு சட்டத்தின் கீழ் அனுமதி இல்லாததால், காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு புலனாய்வு அமைப்பு கோர முடியாது என்று வாதிட்டனா்.