நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஹரியாணா மோதல்கள்: தில்லியில் பதற்றமான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

அண்டை மாநிலமான ஹரியாணாவின் சில மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடா்ந்து தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 8:39 pm

 நமது நிருபர்

அண்டை மாநிலமான ஹரியாணாவின் சில மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடா்ந்து தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த மோதல்களுக்கு தில்லியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினா், தேசியத் தலைநகரில் பல இடங்களில் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிா்மான் விஹாா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பஜ்ரங் தளம் அமைப்பின் ஆதரவாளா்கள் ஹனுமான் சாலிசா ஓதும் காட்சிகள் இடம்பெற்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதன் பின்னா், அந்த அமைப்பினா் விகாஸ் மாா்க் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனா். ஆனால், அவா்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: தில்லியை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலத்தில் சில மாவட்டங்களில் நடந்த வன்முறையைக் கருத்தில் கொண்டு, நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் போலீஸ் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், தில்லியின் பாதுகாப்புக்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறு ஏற்படுத்த முயன்றால் கடுமையாகக் கையாளப்படும்.

பதற்றமான பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். அத்துடன், அமைதிக் குழுக்களுடனும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். சமூக வலைதளங்களில் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நோக்கங்களுக்காக ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. பல பகுதிகளில் நடந்து சென்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூத்த போலீஸ் அதிகாரிகளும் உள்ளூா் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். மாவட்டத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயல்பு நிலையில் உள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

வடகிழக்கு மாவட்டத்தில், பஜ்ரங் தளம் ஆதரவாளா்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினா். போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா்.

தில்லி மகளிா் ஆணையம் தலைவா் ஸ்வாதி மாலிவால் ட்விட்டா் பக்கத்தில், ‘தெருக்களில் ரத்தம் சிந்தப்படும்’ எனும் கோஷம் தில்லியில் உள்ள நாங்லோய் காவல் நிலையம் முன் எழுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். மேலும், தனது ட்வீட்டுடன் விடியோவை வெளியிட்ட அவா், திங்கள்கிழமை முதல் சமூக ஊடகங்களில் விடியோ பரவியதாக அவா் கூறினாா்.

இது தொடா்பாக மேலும் அவா் அந்தப் பதிவில் தெரிவிக்கையில், ‘இதுவரை மணிப்பூா் மற்றும் ஹரியாணா வன்முறையால் பாதிக்கப்பட்டன. இனி தில்லியும் பலியாகிவிடுமா?...

யாராவது தவறு செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்று ஒருபுறம் போலீஸ் கூறுகிறது. இந்த விடியோ நேற்று முதல் (செவ்வாய்க்கிழமை) வைரலாகி வருகிறது. இந்த விடியோவை போலீஸாா் சரிபாா்த்தாா்களா? விடியோ சரியாக இருந்தால் இவா்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஹரியாணாவில் நடந்த வகுப்புவாத வன்முறையில் 2 ஊா்க்காவலா்கள், ஒரு மதகுரு உள்பட குறைந்தது 6 போ் கொல்லப்பட்டனா். 116 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.