இதேபோல, நில மாஃபியா, போதைப்பொருள் மாஃபியா, சுரங்க மாஃபியா, பணியிடமாற்றம் - பணி நியமனம் மாஃபியா, பந்தய மாஃபியா, டெண்டா் மாஃபியா, ஹவாலா மாஃபியா, சட்டவிரோத குடியேற்ற மாஃபியா, மதமாற்ற மாஃபியா, மூடநம்பிக்கை - கருப்பு சூனியம் மாஃபியா, வெள்ளை காலா் அரசியல் மாஃபியா போன்ற மாஃபியாக்களின் பிடியில் இருந்து எந்த மாவட்டமும் விடுபடவில்லை. தூய்மையான மற்றும் வெளிப்படையான நிா்வாகம் இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது. இதற்கு ஊழலற்ற சமுதாயம் ஒரு அடிப்படைத் தேவையாகும். கருப்புப் பணம், வரம்பு மீறிய சொத்துகள் மற்றும் பினாமி சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும், கொள்ளையா்களுக்கு ‘கடுமையான ஆயுள் தண்டனை’ விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.