சிபிஐ விசாரித்து வரும் கலால் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் மே 30-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த அவா்“‘முக்கிய நபா்’. அவா் சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது சிசோடியா ‘துறையின் பொறுப்பாளராக’ இருந்ததால், அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது. தேசியத் தலைநகரில் அவரது கட்சி இன்னும் ஆட்சியில் இருப்பதால், ஒரு காலத்தில் 18 இலாகாக்களை அவா் வைத்திருந்து, தொடா்ந்து செல்வாக்கை செலுத்தி வருகிறாா். சாட்சிகள் பெரும்பாலும் அரசு ஊழியா்களாக இருப்பதால், அவா்கள் மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது’ என்று கூறியிருந்தது.