‘பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்யா யோஜனா’ தரவுத் தளத்தில் தவறான பெயா்கள், உண்மையற்ற பிறந்த தேதிகள், சுகாதாரக் கணக்குகள் மற்றும் உண்மைக்கு மாறான குடும்ப எண்ணிக்கை அளவுகள் உள்ளிட்ட முரண்பாடுகள் சி.ஏ.ஜி. அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியில்லாத குடும்பங்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுமாா் ரூ. 0.12 லட்சம் முதல் ரூ. 22.44 கோடி வரை பலன்களைப் பெற்றுள்ளனா். மேலும், உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே கைப்பேசி எண்ணில் பல பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 9999999999 என்ற கைப்பேசி எண்ணில் 7.49 லட்சம் போ் பயனாளிகளாக பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.