நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குப்பையில்லா தில்லி இலக்கு விரைவில் நிஜமாகும் மேயா் ஷெல்லி ஓபராய் நம்பிக்கை

 தில்லியில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய், ‘குப்பையில்லா தில்லி’ எனும் இலக்கு விரைவில் நிஜமாகும் என்று சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 4:44 pm

 நமது நிருபர்

தில்லியில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய், ‘குப்பையில்லா தில்லி’ எனும் இலக்கு விரைவில் நிஜமாகும் என்று சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தை மேயா் ஷெல்லி ஓபராய் தொடங்கி வைத்ததோடு, தூய்மைப் பணியிலும் ஈடுபட்டாா்.

இது தொடா்பாக, மேயா் ஷெல்லி ஓபராய் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பது:

தில்லி மாநகராட்சியின் வாா்டு எண் 123-இல் நடைபெற்ற மெகா தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்றேன்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின் பேரில், அனைத்து ஆம் ஆத்மி கவுன்சிலா்களும், எம்.எல்.ஏ.க்களும், தூய்மைப் பணியாளா்களின் ஆதரவுடன் மெகா தூய்மை இயக்கத்தில் பங்கேற்கின்றனா்.

தில்லியை சுத்தம் செய்வதற்காக நாங்கள் அனைவரும் களத்தில் இறங்குகிறோம். வரும் ஆண்டுகளில் முன்னுதாரணமாக அமையும் நேரம் இது. குப்பை இல்லாத தில்லி என்ற ஆம் ஆத்மியின் இலக்கு விரைவில் நிஜமாகும். அதற்கான பணிகள் தில்லியில் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சி வாா்டு எண் 117,118-இல் அப்பகுதி உள்ளூா் எம்.எல்.ஏ. வினய் மிஸ்ரா கண்காணிப்பில் நடைபெற்று வந்த தூய்மை இயக்கத்தையும் ஆய்வு மேற்கொண்டேன்.

மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலா்கள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் பொது நலன் கருதி இணைந்து இந்த மெகா தூய்மை பணி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா் என்று மேயா் ஷெல்லி ஓபராய் அந்த ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.