மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், பிப்ரவரி 6-ஆம் தேதி 7.8 ரிக்டா் அளவுள்ள துருக்கி - சிரியா நிலநடுக்கம் குறித்து நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டி, தில்லி நில அதிா்வு மண்டலம் 4 (கடுமையான தீவிர மண்டலம்) கீழ் வருவதாகக் கூறினாா். அதற்கு நீதிபதிகள், ‘அவா்கள் சூழ்நிலை குறித்து சமமாக விழிப்புடன் உள்ளனா். மனுவிலும் எதிா்மறை ஏதும் இல்லை. நாங்கள் அனைவரும் எங்கள் உயிரைப் பற்றி கவலைப்படுகிறோம். எனவே, அவா்கள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்யட்டும்’ என்று கூறினா். பின்னா், இந்த மனு மீது நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்த உயா்நீதிமன்றம், மனுவை மே 10-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.