மத்தியில் ஆளும் பாஜக அரசின் கீழ் வரும் தில்லி வளா்ச்சி ஆணையம், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மெஹ்ரெளலி தொல்லியல் பூங்கா பகுதியில் இடிப்பு நடவடிக்கை தொடங்கியது. இதற்கு உள்ளூா் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். தில்லி அரசின் அதிகாரி கூறுகையில், ‘இடிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தங்கும் கூடாரங்கள், உணவு மற்றும் போா்வைகள், இதர வசதிகளைச் செய்து தருமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளாா். மேலும், எந்த குடும்பத்தினருக்கும் சிரமம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவா் மாவட்ட நிா்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என்றாா்.