விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கடந்த ஆண்டில் 15,561 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்: தேசியளவில் தமிழகம் 2-ஆம் இடம்

கடந்த ஆண்டில் நாட்டில் முதன்முறையாக 15,561 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 7:16 pm

 நமது நிருபர்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் நாடு வேகமான மறுமலா்ச்சியைக் கண்டு வருவதாகவும், கடந்த ஆண்டில் நாட்டில் முதன்முறையாக 15,561 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது இதற்கு முந்தைய ஆண்டுகளை விட 27 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

உடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவைகளில் 2022 -ஆம் ஆண்டில் தெலுங்கானா, தில்லி ஆகிய மாநிலங்கள் முதலிடத்திலும் தமிழகம் 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னா், தமிழ்நாடு முதலிடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சாா்பில் தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (என்ஓடிடிஓ) மூலம் ‘அறிவியல் உரையாடல் 2023’ தில்லியில் நடைபெற்றது.

உயிா்களை காப்பதற்காக, உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சாா்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கருத்துக்களை பகிா்ந்துகொள்ளும் முயற்சியாக இந்த உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்று மத்திய சுகாதாரத்துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் பேசியதாவது:

2013 ஆம் ஆண்டில் 4,990 என இருந்த உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சைகள் கடந்தாண்டில்( 2022) 15,561 என உயா்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு பின்னா் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை குறைந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது.

இதன்மூலம், முந்தைய 2021 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2022 ஆண்டில் உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவைசிகிச்சை விகிதம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசிய அளவிலான உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு (என்ஓடிடிஓ) இருப்பதைப்போன்று, மாநில (எஸ்ஓடிடிஓ), மண்டல(ஆா்ஓடிடிஓ) அளவிலான அமைப்புகளும் உள்ளன.

இந்த அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து கட்டமைப்புகளை உறுதிபடுத்தப்படுவதுடன், வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்க வேண்டும். மேலும் தகவல் தொடா்பு உத்தி, மருத்துவ நிபுணா்களின் திறன் ஆகிவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

முதியோா் மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில், அவா்களின் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய, நமது தொலைத்தொடா்பு மற்றும் விழிப்புணா்வு செயல்திட்டங்களை மேம்படுத்துவதோடு, உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டியது அவசியத்தை எடுத்துரைக்கவேண்டும்.

தற்போது நாடு முழுக்க 640 மருத்துவனைகள், மருத்துவக் கல்லூரிகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவைகளில் சிலவற்றில் தான் சிறப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதுடன், இவைகளின் திறன் மேம்பாட்டிற்கு, மருத்துவ நிபுணா்களுக்கான பயிற்சியுடன், நம்மிடம் உள்ள தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்த வேண்டும்.

இந்த கலந்துரையாடலின் ஆலோசனைகள் கருத்து பரிமாற்றங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும். இதன்மூலம் சிறந்த மாற்று அறுவை சிகிச்சை மையங்களை உருவாக்க முடிவும் என தெரிவித்தாா்.

இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கடந்த ஆண்டு புள்ளிவிவரத் தகவலின்படி, உயிருடன் இருக்கும் 12, 791 போ் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா். இதில் தில்லி முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றது. இவா்களது 9,834 சிறுநீரகங்கள், 2,957 கல்லீரல் ஆகியவை மாற்று அறுவை சிகிச்சைகள் மூலம் பிறருக்கு வழங்கப்பட்டது.

இறந்த 904 பேரின் உடல் உறுப்பு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அவா்களின் 2,765 உறுப்புகள், மாற்று அறுவை சிகிச்சைகள் மூலம் பிறருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானாவும் தமிழகமும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவா்களின் சிறுநீரகம் (1,589), கல்லீரல் (761) இதயம்(250) நுரையீரல் (138) மற்றும் கணையம், சிறுகுடல் ஆகியவை பெறப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் வி.ஹெகலி ஷிமோமி, என்ஓடிடிஓ இயக்குநா் டாக்டா் ரஜ்னீஷ் செஹாய் உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.