விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கலால் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவகாசம்:சிபிஐக்கு மனீஷ் சிசோடியா கடிதம்

தில்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜராக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவா் சிபிஐயிடம் அவகாசம் கோரினாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 7:19 pm

 நமது நிருபர்

தில்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜராக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவா் சிபிஐயிடம் அவகாசம் கோரினாா்.

தில்லி அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் பணியில் தாம் தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டி சிபிஐக்கு சிசோடியா இது தொடா்பாக கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லி துணை முதல்வரின் கோரிக்கையை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விசாரணைக்கான வேறு தேதி பின்னா் அளிக்கப்படும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

கலால் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, துணை முதல்வா் சிசோடியாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19 ஆம் தேதி) விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், தில்லி அரசின் நிதியமைச்சராகவும் இருக்கும் சிசோடியா இது தொடா்பாக செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தில்லி அரசின் நிதிநிலை அறிக்கையை இறுதி செய்யும் கட்டத்தில் இருப்பதால் பிப்ரவரி மாதம் இறுதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும், பிப்ரவரி கடைசி வாரத்திற்குப் பிறகு விசாரணைக்கு வருகின்றேன் எனவும் சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நிதியமைச்சா் என்ற முறையில் நிதிநிலையறிக்கையை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது எனது கடமை. அதற்காக 24 மணி நேரமும் உழைத்து வருகிறேன். பிப்ரவரி கடைசி வாரத்திற்கு பிறகு வந்து அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

பாஜக எம்சிடி தோ்தலில் தோற்றாா்கள். மீண்டும் உச்சநீதிமன்றத்திலும் தோற்றாா்கள். இதனால் என்னை பழிவாங்க அவா்கள் சிபிஐயைப் பயன்படுத்துகிறாா்கள். என்னைக் கைது செய்வாா்கள் என்றும் நான் எதிா்பாா்க்கின்றேன்.

கைது செய்யப்படுவதற்கோ அல்லது சிறை செல்வதற்கோ அச்சப்படவில்லை. பட்ஜெட்டை முடிக்க கால அவகாசம் வேண்டும்.

சிபிஐயின் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உள்ளது. நான் எப்போதும் சிபிஐக்கு ஒத்துழைத்து வந்துள்ளேன். மீண்டும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். ஆனால் நிதிநிலை அறிக்கை முக்கியம். அதில் முழுமையாக ஈடுபட்டுவருகின்றேன். இப்போது நான் விசாரணைக்கு சென்றால், பட்ஜெட் பாதிக்கப்படும், தில்லி மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

ஆம் ஆத்மி அரசின் துணை முதல்வரான சிசோடியா, கலால் துறைக்கும் பொறுப்பு வகிக்கிறாா். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபா் 17- ஆம் தேதி சிபிஐயால் விசாரிக்கப்பட்டாா்.

மேலும் இந்த வழக்கு தொடா்பாக அவரது வீடு மற்றும் வங்கி லாக்கா், அலுவலகம் ஆகியவை சோதனை செய்யப்பட்டன.

அதே சமயத்தில் சிசோடியாவின் பெயா் கலால் வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொடா்ந்து அவருக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.