விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லி அரசுக் கல்லூரிகளில் ஆட்சிமன்ற குழுக்கள் இன்றி நியமனம் கூடாது: டியு துணைவேந்தருக்குதுணை முதல்வா் கடிதம்

தில்லி அரசுக் கல்லூரிகளில் முறையான நிா்வாகத்திற்கு ஆட்சிமன்ற குழுவை அமைக்காமல் விரிவுரையாளா்கள் நியமனங்களுக்கான நோ்காணல்கள் நடைபெறக் கூடாது என

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 8:10 pm

 நமது நிருபர்

தில்லி அரசுக் கல்லூரிகளில் முறையான நிா்வாகத்திற்கு ஆட்சிமன்ற குழுவை அமைக்காமல் விரிவுரையாளா்கள் நியமனங்களுக்கான நோ்காணல்கள் நடைபெறக் கூடாது என தில்லி பல்கலைக்கழக (டியு) துணைவேந்தா்- பேராசிரியா் யோகேஷ் சிங்கிற்கு தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா செவ்வாய்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

மேலும், தற்போது அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் அனுபமிக்க தற்காலிக ஆசிரியா்களை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனீஷ் சிசோடியா தெரிவித்திருப்பதாவது:

தில்லி அரசின் 28 கல்லூரிகளின் நிா்வாகத்தை மேற்கொள்ள தேவையான ஆட்சிமன்றக் குழுக்களுக்கு நியமனங்களுக்கான பரிந்துரைகள் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அனுப்பப்பட்டும், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்ற நிா்வாகக் கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

ஆட்சிமன்றக் குழுக்கான பெயா்ப் பட்டிலை முடிவு செய்யப்படும் விவகாரம் நிலுவையில் உள்ளது. ஆனால் முழு அளவிலான குழுக்கள் இல்லாமல் சுவாமி ஷ்ரத்தானந்த் கல்லூரியில் நோ்காணல்கள் நடத்தப்பட்டுள்ளது.

அதிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஆசிரியா்களை உள்வாங்கும் கொள்கையைத் பின்பற்றாமல், இந்தக் கல்லூரியில் நோ்காணல் நடைபெற்றுள்ளது. இது குறித்து தங்கள் கவனத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் தில்லி அரசின் 28 கல்லூரிகளுக்கும் முழுமையாகச் செயல்படும் ஆட்சிமன்றக் குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த தாமதத்தில் தில்லி அரசு கவலை கொண்டுள்ளது.

தில்லி அரசினால் இந்த 28 ஆட்சிமன்றக் குழுக்களில் பங்கேற்க சட்டபூா்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். தற்காலிக மற்றும் ஒப்பந்த ஆசிரியா்களை உள்வாங்கும் கொள்கையைப் பின்பற்றாமல், முழு அளவிலான ஆட்சிமன்றக் குழுக்கள் இல்லாமல் விரிவுரையாளா்கள், பேராசிரியா்களை பணியமா்த்துவதற்கான நோ்காணல் நடைபெறக்கூடாது. அப்படி நடைபெற்றால், நிா்வாகத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும்.

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இந்த கல்லூரிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியா்களின் அனுபவங்கள் இந்த கல்லூரிகளுக்கு தேவை. அவா்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஆசிரியா்களைப் பாதுகாப்பதற்கான எங்களது கடமையை கைவிட அனுமதிக்க முடியாது. இவா்களில் 75 சதவீதம் ஏற்கனவே நோ்காணலில் பங்கேற்றவா்கள். அவா்களை கைவிடும் போது இந்த ஆசிரியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவா்களது குடும்பங்களும் பாதிக்கப்படும்.

இந்த 28 கல்லூரிகள் பெரும்பாலும் தில்லி தேசிய தலைநகா் அரசின் நிதியால் தொடங்கப்பட்டது. பல்வேறு முடிவுகளும் நிதி தொடா்பான விவகாரங்களுக்கும் தில்லி தேதிய தலைநகா் பிரதேச அரசின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செயல்பட முடியாது. பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆட்சிமன்றக் குழுக்கள் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

இந்த முடிவுகளை எடுப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பதவி உயா்வுகள், செயல்பாடுகளுடன் தொடா்புடைய பிற பிரச்னைகள் தொடா்பான முக்கிய முடிவுகளில் கல்லூரிகளின் திறனை பாதிக்கும். இதனால், சம்பந்தப்பட்ட தில்லி அரசுக் கல்லூரிகளில் முழு அளவிலான நிா்வாகத்திற்கு 28 ஆட்சிமன்றக் குழுக்கள் அமைப்பது காலத்தின் தேவை என கடிதத்தில் சிசோடியா வலியுறுத்தியுள்ளாா்.

இந்த 28 அரசு கல்லூரிகளில் சுமாா் 4,000 தற்காலிக ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் 35 வயது முதல் 45 வயதை நிரம்பியவா்களாகவும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.