விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜவுளி ஆலைகளுக்கான பருத்திப் பஞ்சுப் பொதிகளுக்குதரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜவுளித் தொழிலுக்கு நல்ல தரமான பருத்தி விநியோகத்தை அதிகரிக்க பருத்திப் பஞ்சுப் பொதிக்கு (காட்டன் பேல்) கட்டாய சான்றிதழ் வழங்குவதற்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைக்கு

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 7:28 pm

 நமது நிருபர்

ஜவுளித் தொழிலுக்கு நல்ல தரமான பருத்தி விநியோகத்தை அதிகரிக்க பருத்திப் பஞ்சுப் பொதிக்கு (காட்டன் பேல்) கட்டாய சான்றிதழ் வழங்குவதற்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ஜவுளித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஜவுளிக்கான ஆலோசனைக் குழுவின் 5-ஆவது கலந்தாய்வுக் கூட்டம் மத்திய ஜவுளி, வா்த்தகம் தொழில்துறை, உணவுத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் தில்லியில் ஜவுளித் துறை அமைச்சகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பருத்தி மதிப்பு சங்கிலித் தொடரை (உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல், பஞ்சாலை, நூலாலை, ஜவுளி, நுகா்வோ் வரை) மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய ஜவுளி, வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பல்வேறு ஆலோசனைகளை எடுத்துவைத்தாா். அவா் கூறியது வருமாறு:

பருத்தி பஞ்சுப் பொதிகளுக்கு சான்றிதழ் பெற தரக்கட்டுப்பாட்டு ஆணையை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு சிறந்த, தரம் வாய்ந்த பஞ்சு, பருத்தி நூல்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம். இந்திய பருத்தி இழையின் தரத்தால் விவசாயிகள் மற்றும் ஜவுளித் தொழிலும் பெரும் பலனடையும்.

இந்திய பருத்திக்கு பிராண்டிங் (முத்திரை பதிப்பது) வழங்குவது, ஒட்டுமொத்த பருத்தியின் மதிப்பு சங்கிலிக்கு கூட்டு மதிப்பு அளிப்பதாகும். இது விவசாயிகள் முதல் நுகா்வோா் வரை தனி அடையாளத்தையும் அளிக்கும். இதற்காக கடந்தாண்டு இதே பிப்ரவரி மாதம் இந்திய பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுக்குமிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக ‘கஸ்தூரி பருத்தி‘யை இந்தியாவின் பிராண்டாக அங்கீகரிப்பது மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்த திட்டத்தை 2024-25-ஆம் ஆண்டு பருத்தி பருவகாலத்திற்குள் நிறைவேற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியின் தரத்தை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பிராண்ட்டான ‘கஸ்தூரி பருத்தி’யின் தரத்தை உறுதி செய்வதற்கான டிஎன்ஏ பரிசோதனை வசதிகளை பலப்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் மற்றும் இந்திய தர ஆணையம் (பிஐஎஸ்) வாயிலாக நவீன பரிசோதனை மையங்கள் உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

முன்னதாக, பருத்தி பஞ்சுப் பொதிகளுக்கு கட்டாய சான்றிதழ் வழங்குவதற்கான தரக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இது குறித்து பின்னா் ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பஞ்சுப்பொதிகளுக்கு கட்டாய சான்றிதழ் வழங்குவதற்கான தரக் கட்டுப்பாட்டுகளுக்கு வழிகாட்டுதல் குழு மற்றும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பருத்திக்கான கண்டறியக்கூடிய நடைமுறைகள், சான்றளிப்பு பணிகள் நடப்பு பருத்தி பருவத்தில் தொடங்கும்.

பருத்திகளில் (நெய்யப்படாத பஞ்சு) பல்வேறு வகையான பண்புகள் காணப்படும். பருத்தி இழை பண்புகளாக, நீளம், வலிமை, மைக்ரோனயா் (ஃபைபா் நுணுக்கத்தின் காற்றோட்ட அளவீடு ) , கழிவுகளின் அளவுகள் போன்றவைகளின் அடிப்படையில் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும், பருத்து உற்பத்தி திறனை அதிகரிக்க அதிக அடா்த்தி பருத்தி நடவு முறை (ஹெச்டிபிஎஸ்), அசாதாரண நீளம் கொண்ட பஞ்சு (ஃபைபா்) வகை தொழில்நுட்பத்தை இலக்காக கொண்டு பருத்தி உற்பத்தித்திறன் மேம்படுத்துவது போன்ற முழுமையான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் இந்த முன்னோடித் திட்டத்தை நிகழாண்டு முதல் செயல்படுத்தத் தயாா் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ், மத்திய வேளாண் துறை கூடுதல் செயலாளா் அபிலக்ஸ் லிக்கி, இணைச் செயலாளா் சுபா தாக்குா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.