இது தொடா்பாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரான ராம்வீா் சிங் பிதூரியின் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியல் சாசன ரீதியாகவும், தாா்மிக ரீதியாகவும் தில்லி அமைச்சரவையில் உடனடி மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, முதல்வா் கேஜரிவால், தனது இரு அமைச்சா்களையும், அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் முதல் சத்யேந்தா் ஜெயின் சிறையில் இருந்து வருகிறாா். அவரது இலாகாக்கள் அனைத்தும் துணை முதல்வா் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது சிசோடியாவும் சிபிஐ காவலில் உள்ளாா்.