மதுரையில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என்றோம். அதற்கு அமைச்சா், ரூ.1,400 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.1,900 கோடியாக உயா்ந்திருப்பதாகவும், அதற்கான திட்ட வரைபடம், ஆலோசகா்களை நியமிக்க ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளதாகவும் கூறினாா். மேலும், விரைவில் அந்தப் பணியைத் தொடங்கலாம் என்றும் கூறினாா். கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, மதுரை எய்ம்ஸ் பணிக்குப் பிறகு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றாா்.