இந்த விவாகரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தப்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிபதி குமாரின் பதவிப் பிரமாணத்தை ஒத்திவைக்க ஆட்சேபம் தெரிவித்தாா். அப்போது, அதற்கு நீதிபதிகள் அமா்வு, சா்ச்சைக்கு இடமில்லாத வகையில் இந்த விவகாரத்தை கையாள்வதற்காக உறுதிமொழி ஏற்பு நடமுறைகளை ஒத்திவைப்பது குறித்து தில்லி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த வாதத்தை பதிவு செய்ததாகத் தெரிவித்தது.